Monday, August 18, 2008

ஹிட்ச்காக்கின் "பிரான்சி" (Frenzy) - A Shocking Masterpiece

ஹிட்ச்காக் மேனியா என கூறும் படியாக அவரின் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன்!! இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது எல்லா திரைப்படங்களையும் ஹிட்ச்காக் இயக்கியது என தெரியாமல் பார்க்க தொடங்கி இடைவேளையின் பொழுது மட்டுமே அறிகிறேன்.அடுத்து என்ன என்பதை அறிய ஆர்வம் தூண்டும் அவரின் இயக்கம்,தேர்ந்த நடிகர்கள்,காட்சியமைப்பு,நம்பும் படியான நிகழ்வுகள், அழகிய ப்ளாக் அண்ட் வைட் ஒளிப்பதிவு,காமரா ஜாலங்கள் என பார்வையாளனை ஈர்க்கும் எல்லா வித்தைகளும் அறிந்தவர் அவர்.




ஹிட்ச்காக் தனது இறுதி காலங்களில் இயக்கிய சிறந்த படங்களுள் "Frenzy" திரைப்படம் முக்கியமானது.இத்திரைபடன் இயக்கம் பொழுது ஹிட்ச்காக்கின் வயது 73,பெரும்பாலான திரை விமர்சகர்களால் ஹிட்சாக்கின் கடைசி சிறந்த படம் என "Frenzy" கருதப்படுகின்றது!!1972ல் வெளிவந்த இத்திரைப்படம் ஹிட்ச்காக்கின் சொந்த ஊரான லண்டனில் படம்பிடிக்க பட்டது,மேலும் A - சர்டிபிகட் வாங்கிய ஹிட்ச்காக்கின் முதல் திரைப்படமும் இதுவே!!

லண்டன் நகரில் இளம்பெண்கள் வரிசையாய் கொலை செய்யபடுகின்றனர்.கொலை செய்தவன் தனது கழுத்து டையால் ( Neck Tie) அப்பெண்களின் கழுதை இறுக்கி கொலை செய்துவிட்டு டையினை அப்படியே விட்டு செல்கிறான். டை கில்லர் என அப்பகுதி முழுதும் அறிய பட்டு போலீசாரால் வேறு தடயங்கள் அறிய முடியா வண்ணம் தப்பித்து வருகிறான். இந்நிலையில் கதைநாயகன் ஒவ்வொரு கொலையின் பொழுதும் தானறியாமல் அவ்விடங்களில் காணப்பட்டு போலீசாரால் கைது செய்யபடுகிறான்.தான் நிரபராதி என நிரூபிக்க தப்பித்து வெளிவரும் நாயகன் அப்பகுதியில் பெரும் பெயர் பெற்ற தன் நண்பனே கொலையாளி என்பதை உணர்ந்து அவனை தொடர்கிறான். இக்கொலைகளை முதல் இருந்து ஆராய்ந்து வரும் மூத்த போலீஸ் அதிகாரியும் உண்மை கொலைகாரனை கண்டு பிடித்து கைது செய்து நாயகனை விடுவிப்பதோடு கதை முடிகிறது.




அவரின் முந்தைய படங்களான சைக்கோ,பேர்ட்ஸ் திரைப்படங்களை போல கிளைமாக்ஸ் காட்சியை யூகிக்க முடியாத வகை த்ரில்லர் இல்லை இத்திரைப்படம்.கொலைகாரன் யாரென முதலிலேயே தெரிந்துவிட்டாலும் விறுவிறுப்பிற்கு குறைவின்றி படம் நகர்கிறது.எல்லாராலும் பெரிதும் வியந்து பேசப்பட்ட இரண்டு காட்சிகள் உண்டு இத்திரைப்படத்தில்- ஒன்று காமரா கோணங்களில் செய்த புதுமை,மற்றொண்டு ஒளிப்பதிவு மற்றும் காட்சி அமைப்பில் செய்த புதுமை.அக்காட்சிகள் பின் வருமாறு..

இளம் பெண் ஒருத்தியை கொலைகாரன் தன் அறைக்கு அழைத்து செல்ல,மெல்ல காமரா அறைக்கதவில் இருந்து பின் வந்து படிக்கட்டுகளில் பயணித்து தெருவோடு வந்து மனித நடமாட்டத்தில் கலப்பதாய் அமைந்த காட்சி,மிகச்சிறந்த காமரா கையாடலுக்கு சான்று.இறந்த பெண் ஒருத்தியின் கைகளில் தனது ப்ரோச்சை மறந்து விட்ட கொலைகாரன்,மூடையில் கட்டி தக்காளி சரக்கு வண்டியில் தூக்கி எறியப்பட்ட அவளின் பிணத்தை தேடி அந்த ப்ரோச்சை திரும்ப பெரும் காட்சி ஓடுகின்ற வண்டியில் இயல்பாய் அமைந்த வெளிச்சத்தை கொண்டு திகில் நிறைந்து படமாக்கபட்டுள்ளது!!

மற்றும் ஒரு திகில் படம் என ஒதிக்க விட முடியாதபடி சிறந்த காமரா கோணங்கள் கொண்டு இயக்கப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்த நாட்களில் ""From the Master of Shock! A shocking masterpiece!" என்னும் உபதலைப்போடு வந்ததாக சொல்லப்படுகின்றது!! அது முற்றிலும் சரியே.

2 comments:

வால்பையன் said...

அவருடைய முந்தய படங்களை மறுபடி எடுக்கும் பழக்கம் அவருக்கு உண்டு.
இதன் முதல் பதிப்பு jack the ripper சாயலில் வரும்,
தொடர் சைக்கோ கொலைகள் அனைத்திற்கும் அவன் தான் முன்னோடி

லேகா said...

சுவாரசியமான தகவல்..நன்றி வால்பையன்!!