அளவற்ற அன்பில் திளைத்திருக்கும் கட்லர் தம்பதியினர் மூன்று ஆண்டுகள் கழித்து தமது தேனிலவை கொண்டாட நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள விடுதியில் தங்கிட செல்கின்றனர்.அங்கே அவர்கள் லூமிஸ் தம்பதியினரை சந்திக்க நேர்கின்றது.ஜார்ஜ் லூமிஸ், ரோஸ் லூமிஸ்(மர்லின் மன்றோ) யை விட பல வயது மூத்தவன்..மனைவி மீது அதீத அன்பு கொண்டவன்..கொஞ்சம் உணர்ச்சி வசபடகூடியவனும் கூட.பேரழகியான ரோஸ் கணவனை விட்டு வேறு ஒரு இளைஞனோடு காதல் கொண்டிருக்கின்றாள்.ரோசின் இந்த போக்கினை குறித்து ஜார்ஜ் கட்லர் தம்பதியினரிடம் வருந்தும் காட்சி அவன் தன மனைவி மீது கொண்டிருக்கும் உண்மை காதலை எடுத்துரைக்க போதுமானாதாய் இருக்கின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxuixY3GPMeVCaNzlo9DrdW4TTHEg-20-rnAI3S_1StDKQvwaQtTtmnVbNQnm0Vug1Etc0z-OHF9V4CSgrkSeAN-N6ovp_MoGPoQHfVhkwNfr5W0JabtoQCJxf9IqYjmguP-tlGS9drFM/s400/Niagra.jpg)
ரோஸ் தம் காதலனோடு சேர்ந்து கணவனை கொல்ல சதி செய்ய..பெரும் திருப்பமாய் காவல்துறையினர் கண்டுபிடிப்பதோ அவளின் காதலனின் உடலை.
தேனிலவு கொண்டாட்டங்களை விடுத்து கட்லர் தம்பதியினர் இந்த கொலை வழக்கில் சிக்கி கொள்ள..ரோசின் மரணத்திற்கு பிறகு உண்மைகள் மெல்ல வெளிவருகிறது.அப்பாவி கணவனான ஜார்ஜின் முடிவு சோகமானது.
இத்திரைப்படத்தில் என்னை வெகுவாய் கவர்ந்தது மூன்று விஷயங்கள்..ஒன்று மர்லின் மன்றோ...சொக்க வைக்கும் பார்வையில் ஒய்யாரமாய் நயாகரா வீழ்ச்சியின் பின்னணியில் இவர் நடந்து வரும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்..இரண்டு,நயாகரா..படத்தில் 95 சதவீத காட்சிகள் நயாகாரா நீர்வீழ்ச்சியின் பின்னணியிலேயே எடுக்கபட்டுள்ளது.நையகராவின் பிரமாண்டத்தை முழு திரையில் பார்க்க ஆர்வம் கூடியது.மூன்று..காட்சியமைப்பு..கருப்பு வேலை காலத்திலும் கலக்கியவர் என ஹிட்ச்காக்கை சொல்லுவர் அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில் மிரட்டி இருப்பார்.இந்த திரைப்படமும் அந்த வகையில் மிக சிறந்ததே.
1953 இல் வெளிவந்த இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது என்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.காதலை இருவேறுவிதமாய் சொல்லியும்,நயாகராவின் பிரமாண்டத்தை வெகு அழகாய் படம்பிடித்து காட்டியுள்ள விதமும் வெகு அருமை..த்ரில்லர் படங்கள் உங்களுக்கு பிடிக்குமாயின் தாராளமாய் இதை பரிந்துரைப்பேன்.