Friday, September 26, 2008

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்" - ஒரு இந்திய குடும்பத்தின் கதை

ஆரம்ப கால இலக்கிய வாசிப்புகளை எளிதில் மறக்க முடியாது.சிறுவர் இலக்கியம் படிக்க ஆவல் மேலிட தேடிய பொழுது முதல் பக்கத்தில் என் ஒன்பதாம் வகுப்பு கிறுக்கல்களோடு இப்புத்தகம் கிடைத்தது."ஈசாப் நீதி கதைகள்","பிஞ்சுகள்","டின்கில்","அக்பர் அண்ட் பீர்பால்",தெனாலிராமன்","டாம் சாயேர்" ஆகிய நூல்களை இப்பொழுது பார்த்தாலும் எனது பால்யம் திரும்பி வந்ததாகவே உணர்வேன்.குழந்தைகளுக்கு என பல புதினங்கள் எழுதிய அனிதா தேசாயின் அற்புத படைப்பு "கடல்புறத்து கிராமம்".




படிப்பறிவில்லாத ஹரிக்கு வேலை செய்ய உகந்தது என தெரிவது மூன்று வழிகள்.ஊரில் புதிதாய் வரபோகும் ரசாயன ஆலை,அவ்வூரின் பெரும் பணக்காரனான பிஜ்ஜுவின் மீன் பிடி கப்பலில்,மும்பை சென்று பிழைத்து கொள்வது.முதல் இரண்டு வழிகளில் நம்பிக்கை இழந்து மும்பை சென்று பிழைக்க எண்ணி கப்பல் ஏறுகிறான். கிராமத்து சிறுவனான ஹரிக்கு மும்பை நகரின் ராட்சச பிரம்மாண்டம்,ஓயாத மக்கள் நடமாட்டம்,இயந்திர நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை தருகின்றது..அப்பெரு நகரிலும் ஹரிக்கு உதவ ரோட்டு உணவு கடை முதலாளி முன் வந்து அவரோடு அவனை வைத்து கொள்கிறார்.

மெல்ல நிறைவேறி வரும் தன் கனவுகளை எண்ணி வியப்பும் பெரிமிதமும் கொண்டு இருக்கும் வேளையில் ஹரிக்கு அவன் பனி செய்யும் உணவு கடையின் அருகில் கடிகார பழுது கடை நடத்தும் கிழவர் ஒருவரோடு நட்பு உண்டாகிறது.பகல் பொழுதுகளில் அவரோடு அமர்ந்து கடிகாரம் பழுது செய்ய கற்று கொள்கிறான்.நாட்கள் செல்ல செல்ல தொழில் தேர்ச்சி உடன் உலக ஞானமும் பெற்று நிறைவான பணத்தோடு வீடு திரும்புகிறான்.இதனிடையில் அவன் சகோதரிகள் தம் வீட்டருகே உள்ள பங்களாவில் வேலை செய்தும்,அவ்வீட்டரின் உதவியோடு தாயை மருத்துவமனையில் சேர்த்து குணமாக்குகின்றனர்.அவன் தாயின் நிலை கருதி தந்தையும் திருந்துகிறார்.




மேலோட்டமாக பார்த்தால் பட்டணம் சென்று பணம் சம்பாதித்து திரும்பும் கிராமத்து சிறுவனின் கதையாய் தோன்றும். குடும்பம் குறித்த அவனது சிறு வயது கடமைகளும்,கனவுகளும்..எட்டா கனியான விஷயங்கள் குறித்த அவனது பார்வைகள் விரிவாய் சொல்ல பட்டுள்ளது.ஹரியின் மூத்த சகோதரி லைலாவின் பாத்திர வடிவமைப்பு மிக நேர்த்தியானது,சிறு வயதில் குடும்ப நிலை அறிந்து தம் விருப்பங்களை விடுத்து உழலும் பல பெண்களின் குறியீடு.தென்னை மரங்களும்,கடல்கரை இரவுகளும் தந்த மகிழ்ச்சியை தொலைத்து மும்பை செல்லும் ஹரியின் பார்வையில் அந்நகரம் விவரிக்கப்படும் இடம் அற்புதம்.

மிக நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.வறுமையின் கொடுமைகளை பாரம் என கருதாது எப்படியேனும் பிழைத்து முன்னேற துடிக்கும் ஹரியின் கதை மிக்க நம்பிக்கை தரவல்லது.மொழிபெயர்ப்பில் எந்த வித இடறலும் இல்லாதது பெரும் ஆறுதல்.பிரிட்டன் அரசு இந்நாவலுக்கு இலக்கிய விருது அளித்துள்ளது.

வெளியீடு :நேஷனல் புக் டிரஸ்ட்
விலை : 22 ரூபாய்

6 comments:

Krishnan said...

Definitely I will pick up this novel soon. I have never read Anita Desai though heard quite a lot about his writing. Incidentally her daughter Kiran Desai won Booker prize for her novel The Inheritance of Loss.
Let me reproduce info on Anita Desai:
"Her novels include Fire on the Mountain (1977), which won the Winifred Holtby Memorial Prize, and Clear Light of Day (1980), In Custody (1984) and Fasting, Feasting (1999), each of which was shortlisted for the Booker Prize. In Custody was made into a film by Merchant Ivory productions. Her children's book The Village by the Sea (1982), won the Guardian Children's Fiction Award".

லேகா said...

Hi Krishnan,tnx for your comments.

Fantastic info provided.."Kadalpurathu Kiramam" is translated by Venugopalan in tamil.Really interesting info..tnx for sharing!!

KARTHIK said...

//தென்னை மரங்களும்,கடல்கரை இரவுகளும் தந்த மகிழ்ச்சியை தொலைத்து மும்பை செல்லும் ஹரியின் பார்வையில் அந்நகரம் விவரிக்கப்படும் இடம் அற்புதம்.//

லேகா said...

@ Karthick

:-)

Panneerselvam said...

Anna can you give the link where we can Buy this book. This will be helpful for us Na.

Panneerselvam said...

Sir can you give the link for book where we can buy