Thursday, July 10, 2008

சுஜாதா சுவடுகள்.....



எழுத்தாளர் சுஜாதாவின் மறைவிற்குப்பின் ஆனந்த விகடன் சுஜாதாவின் நினைவாக அவர் எழுதிய சிறுகதைகளை சுஜாதா சுவடுகள் என்னும் தலைப்பில் வாரம் ஒன்றாக வெளியிட்டு வருகிறது.விரைவில் இதன் தொகுப்பை புத்தகமாக எதிர்பார்க்கலாம்..இரு வாரங்களுக்கு முன் வெளிவந்த "நகர்வலம்" என்னும் சிறுகதை அசல் சுஜாதா பாணி அறிவியல் சிறுகதை...அதன் சுவாரசியமும்,வேகமும் இப்பத்தியை எழுத தூண்டியது...

பெரும் வசதி கொண்ட கப்பல் ஒன்று சென்னையை நோக்கி வருகின்றது,அதில் பயணம் செய்யும் பலருள்,கணவனும்,மனைவியுமாய் ஒரு இளம் தம்பதியினர் உள்ளனர்..அந்த இளைஞன் தன் மூதாதையர் வாழ்ந்த சென்னை நகரத்தை காணும் ஆவல் கொண்டு கடல் கரை நெருங்க நெருங்க பெரும் மகிழ்ச்சி கொள்கிறான்.. இதுவரை கதை படிப்போர் யாருக்கும் வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்பு ஒரு இளைஞனின் பின்பமே மனதில் வந்து மறையும்..

ஆனால் இளைஞனின் மனைவி அவனிடம் வந்து பூமிக்கு வந்ததை விட வேறு கிரகத்துக்கு சென்று இருக்கலாம் ,விடுமுறையை பாழ் செய்து விட்டாய் என சண்டை இடும் பொழுதுதான் அவர்கள் வேற்று கிரத்தில் இருந்து தம் முன்னோர் வாழ்ந்த இடத்தை காண வந்து இருப்பது தெரிகிறது..கதையில் முடிவு பெரும் ஆச்சர்யத்தை கொண்டது..சென்னை நெருங்க கப்பலின் அதிகாரி ஒலிபெருக்கியில் கூறுவது " சென்னை பட்டணம் நெருகுவதால் கப்பலின் மேல் தளம் மூடி கொள்ள போகிறது,இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் நீரினுள் மூழ்கிய சென்னை நகரத்தின் தெருக்கள் வழியே இப்பொழுது கப்பல் செல்ல போகிறது"...............A story with typical Sujatha Touch!!

7 comments:

லேகா said...

Tnx for ur comments..

Unknown said...

Nice story.....your passion towards to tamil is amazing...............

லேகா said...

Thanks Raj for ur comments..Yeah am reading n writing to make my existence more meaningful...keep reading!!

KARTHIK said...

இந்தக் கதைகள் அனைத்தும் அமரர் சுஜாதா அவர்களின் விஞ்ஞானச் சிறுகதை தொகுப்பில் உள்ளது.வெளியீடு உயிர்மெய் பதிப்பகம்.

லேகா said...

தகவலுக்கு நன்றி கார்த்திக்..

தியாகு said...

its will going to happen in future thanx to global warming

Anonymous said...

u r doing great job...it's pleasant for me,and m happy to c ur blog. yes ur work s really meaningful. r u writer?.bcoz ur thinking and words in essay r very powerful.it attracts m.plz don stop this .tamil needs thousands and thousands lekha to grow up...