
தற்கால நிகழ்வாகவே சொல்லப்படும் இந்நாவலின் கதையாடல் எங்கோ அமைந்திருக்கும் மாய தந்திரங்களும் விடை தெரியா ரகசியங்களும் கொண்ட "ஏழு தலை நகரத்தை" சுற்றி வருகிறது.அந்நகரின் பெரும் மாயையை கருதப்படும் "கண்ணாடிகார தெரு" வை பற்றிய வர்ணனைகளோடு தொடங்குகிறது கதை.ஒரே போன்ற அமைப்பு கொண்ட வீடுகளை எதிரெதிரே கொண்ட அவ்வீதியில் யார் நுழைந்தாலும் அவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர்களின் வயதி இருமடங்காகும் எனவும்,அவ்வீதியில் வசிப்போர் யாவும் மாய உலகத்தார் எனவும் உலவும் செய்திகளால் ஏழு தலை நகர மக்கள் அதனுள் செல்ல பீதியுற்றுள்ளனர்.
நாவலின் நாயகன் அசிதன் சாகசம் புரியும் சிறுவனாக காட்ட படாமல் சராசரி சிறுவர்களை போல நட்சத்திரங்களோடும்,பறவைகளோடும் பேசி மகிழ்ந்து பாடத்தை வெறுப்பவனாக வருகிறான்..பல்வேறு இன பறவைகளை சேகரித்து வைக்கும் அசிதனின் தாத்தாவிடம் மானீ என்னும் அறிய வகை புத்திசாலி பேசும் பறவை கிடைக்கின்றது.அசிதனுக்கு உற்ற நண்பனாய் விளங்கும் மானீ பேசும் பாங்கு சிரிப்பை வரவழைக்க கூடியது..மானீயோடு அசிதனுக்கு கிடைக்கும் மற்றொரு நண்பன் அவ்வீட்டில்
உலாவரும் எலி.

கண்ணாடிகார தெருவில் இருந்த வெளிவரும் சிறகு முளைத்த சிறுவன் "பிகா" மாநீயோடும் அசிதனோடும் நட்பு கொண்டு தினமும் இரவில் அவர்களை பார்க்க வருகிறான்,அவீதியை சேர்ந்த ஒருவை கண்ட மகிழ்ச்சியில் அசிதன் எப்படியாவது அதனுள் செல்ல பெரு விருப்பம் கொள்கிறான்.இந்நிலையில் இரும்பு மனிதன் ஒருவனால் நெடிய மரம் ஒன்றில் சிறை வைக்கப்படும் பிகாவை கதை சொல்லிகள் மூவரின் துணை கொண்டு அசிதன் காப்பாற்றுவதோடு கதை முடிகிறது.கதை நிகழும் காலத்தை கதையோடு பொருத்திப்பார்க்க முடியவில்லை மேலும் கதையின் முடிவு குழப்பமுற்றதாய் உள்ளது.இவ்விரு குறைகளை நீக்கிப்பார்த்தால் இது சந்தேகம் இல்லாமல் சிறுவர்களை மகிழ்விக்கும் மாயாஜால நாவலே.
நகரும் ரயில்வே பிளாட்பாரம்,பேசும் நூலகம்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லிகள்,அவர்களின் பேசும் மீன்,குரங்கு,மானியின் பார்வையில் நடக்கும் நட்சத்திர குள்ளர்களுக்கும் வான் விலங்குகளுக்கும் நடைபெறும் போர்,பெரும் பழம் கொண்ட இரும்பு மனிதன்,தினமும் ஒரு வண்ணம் பெரும் எழுதலை நகரத்தின் தெருக்கள்,கேள்வி கேட்கும் மஞ்சள் நாய் என திகட்ட திகட்ட மாயாஜாலங்களுக்கு குறைவின்றி வந்துள்ள இந்நாவல் குழந்தைகள் படித்து கற்பனை செய்து மகிழ ஏற்றது.
6 comments:
புத்தக அறிமுகத்திற்கு நன்றி.
நல்லத் தகவல் அளித்துள்ளீர்கள் நன்றி
எஸ்ராவின் இதுபோன்ற (மேஜிகல்ரியலிசம்)கதைகளை நான் வாசித்ததில்லை.முடிவு என்னவென்று எழுதுவதை தவிருங்கள்.
நல்லபதிவு லேகா.
Thanks for ur comments velaraasi & Rapp
@ Karthick
Point noted Karthick.Thanx for pointing out tat:-)
This gives me the feeling of reading that book... person like me it is very difficult to get that books.
Post a Comment