Saturday, January 17, 2009

கல்யாண்ஜியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

கல்யாண்ஜியின்(கதை உலகில் வண்ணதாசன்) தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு நான் விரும்பி வாசித்த முதல் கவிதை நூல்.வண்ணதாசனின் சிறுகதைகளோடு இருந்த பரிட்சயம் அவரின் கவிதைகளோடு இருந்ததில்லை.இத்தொகுதியின் கவிதைகள் யாவும் நம்மை சுற்றி தொடரும் தினசரி நிகழ்வுகளை,எந்திர வாழ்கை ஓட்டத்தில் கவனிக்க மறந்தவற்றை நினைவூட்டுபவை.மிகபிடித்த சில வரிகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன்..



நிலா பார்த்தல்

ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
-------------------------------------
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
---------------------------------------------------
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.

- கல்யாண்ஜி

தொலைந்த வெளிச்சம்

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன்
அணைந்துவிடுகின்றது
முதல் விளக்குகளுள் ஒன்று
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைத்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.

- கல்யாண்ஜி

வெளியீடு - ஆழி பதிப்பகம்
விலை - 45 ரூபாய்

24 comments:

குப்பன்.யாஹூ said...

கல்யாணி (வண்ண தாசன்) சம காலத்திய மிக சிறந்த கவிஞர், இவரின் பல கவிதைகள் சிறப்பானவை.

சுஜாதா இவரின் தீவிர ரசிகர்.

தமிழ் கூடல் இணைய தளத்தில் இவரின் கவிதைகள் உள்ளது

மகுடேஸ்வரன் கவிதைகள் பற்றயும் ஒரு பதிவு எழுதுங்க லேகா.

பகிர்தலுக்கு நன்றி.

குப்பன்_யாஹூ

சென்ஷி said...

நன்றி லேகா..

லேகா said...

நன்றி சென்ஷி

லேகா said...

நன்றி ராம்ஜி

மகுடேஸ்வரன் தமிழ் கூடல் இணையம் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.

மாதவராஜ் said...

வண்ணதாசனின் தனுமை சிறுகதையை 1986 வாக்கில் படித்தேன். அன்றிலிருந்து அவரது மொழி நடைக்கு நான் கிறங்கியவனாய் இருக்கிறேன். அவருடைய சிறுகதைகள், கவிதைகள் என நிறைய படித்திருக்கிறேன். அவர் நாவல் எழுதவில்லையே என்ற ஆதங்கம் எனக்குண்டு. மூன்று தடவை அவரோடு ஒரே மேடையில் பேசும் வாய்ப்பும், அது தவிர சில விழாக்களில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்புகளும் கிட்டியிருக்கின்றன. கவிதையாகவேத் தெரிவார். நன்றி லேகா...என்ன்னுடைய நினைவுகளை தூண்டியதற்கு.....

Krishnan said...

லேகா சமீபத்தில்தான் இந்த தொகுப்பை வாங்கினேன், உங்கள் review படித்தபிறகு மீண்டும் வாசிக்க தோன்றுகிறது.

பாரதிய நவீன இளவரசன் said...

கல்யாண்ஜியின் சிறந்த கவிதைகளை எங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

அவரது சிறுகதைகள் பலவும்கூட என்னைக் கவர்ந்து இருக்கிறது. எனினும், கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம்தான் அதிகம்.

லேகா said...

வருகைக்கு நன்றி மாதவராஜ்.

"தனுமை" - எனக்கு மிகபிடித்த வண்ணதாசன் சிறுகதைகளுள் ஒன்று.தனுவை எதிர்நோக்கி காத்திருக்கும் நாயகன் நிலையை "தனியாகி தனுவாகி.." என வர்ணித்திருக்கும் இடம் அருமை.வண்ணதாசன் நாவல் எழுதி உள்ளார்."சின்னு முதல் சின்னு வரை" - நீண்ட நாட்களுக்கு முன் படித்தது.

//மூன்று தடவை அவரோடு ஒரே மேடையில் பேசும் வாய்ப்பும், அது தவிர சில விழாக்களில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்புகளும் கிட்டியிருக்கின்றன. //

அருமை.பகிர்தலுக்கு நன்றி.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்

லேகா said...

நன்றி இளவரசன்.

//அவரது சிறுகதைகள் பலவும்கூட என்னைக் கவர்ந்து இருக்கிறது. எனினும், கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம்தான் அதிகம்.//

இவ்விடயத்தில் எனது நிலை தலைகீழ்.வண்ணதாசனின் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.பகிர்தலுக்கு மிக்க நன்றி.

narsim said...

nalla pathivu..

லேகா said...

Tnx Narsim :-)

Sanjai Gandhi said...

//தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.//

பல விஷயங்கள் இப்படி தான். :(

லேகா said...

வருகைக்கு நன்றி சஞ்சய் :-)

Anonymous said...

அவரது அந்நியமற்ற நதி கவிதைத் தொக்குப்பும் நன்றாக இருக்கும்.

மாதவராஜ் said...

லேகா!

வண்ணதாசன் நாவல் குறித்து அளித்த தகவலுக்கு நன்றி. பாருங்கள் இதெல்லாம் தெரியாமல் இவ்வளவு நாளும் இருந்திருக்கிறேன்.

உங்களுக்கு இன்னும் பட்டாம்பூச்சி விருந்து பறந்து வரவில்லையே?
வந்து என "தீராத பக்கங்களில்' இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சின்னு முதல் சின்னு வரை குறுநாவல்தானே... நாவலில்லையே!

முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது
பூ
தாங்க முடியவில்லை
(கல்யாண்ஜி)

ஏதோ ஒரு காலகட்டத்தில் படிக்கும் பழக்கமுடைய எல்லாரும் கல்யாண்ஜியின் கவிதைகளால் பாதிக்கப்பட்டே இருப்பார்கள் என நினைக்கிறேன்.

லேகா said...

வருகைக்கு நன்றி சுந்தர்.

சின்னு முதல் சின்னு வரை குறுநாவல் தான்.பல வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி வடகரைவேலன்.

லேகா said...

நன்றி மாதவராஜ்.

இனியாள் said...

Vegu natkalai nan vaanga uthesiththa puththagam ithu, nalla pathivu lekha.

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

லேகா நான் நேசிக்கும் மிகச்சில அழகியல் கவிதைகளில் கல்யாண்ஜி கவிதைகளும் அடங்கும். இந்த வலைத்தளம் அவரின் கவிதைகளோடு அழகாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி..

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

லேகா நான் நேசிக்கும் மிகச்சில அழகியல் கவிதைகளில் கல்யாண்ஜி கவிதைகளும் அடங்கும். இந்த வலைத்தளம் அவரின் கவிதைகளோடு அழகாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி..

பட்டாம்பூச்சிக் கதைகள் said...
This comment has been removed by the author.